உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டம்; 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு டிரம்ப் அரசு நோட்டீஸ்!

தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் திட்டம்; 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு டிரம்ப் அரசு நோட்டீஸ்!

வாஷிங்டன்: அரசு பணியில் இருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில், பாதுகாப்புத்துறை, தபால் துறை தவிர்த்த பிற அரசு பணிகளில் 23 லட்சம் பேர் உள்ளனர். இத்தனை அரசு ஊழியர்கள் தேவையில்லை என்பது அதிபர் டிரம்ப் கருத்தாக உள்ளது. அரசு துறைகளில் திறன் மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இதே கருத்தை தான் கூறி வருகிறார். மீண்டும் பொறுப்பேற்றது முதல் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப் நிர்வாகம், அரசு ஊழியர்களுக்கு இமெயில் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.இது.அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்வதற்கான திட்டம் ஆகும்.இந்த இமெயில், 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முடிவெடுக்க பிப்ரவரி 6ம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணி திறமையை ஆய்வு செய்து, அவர்களை தொடர்ந்து வைத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்த இமெயில் அறிவிப்பு, எதிர்க்கட்சியினர் மத்தியிலும், தொழிற்சங்கத்தினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஊழியர்கள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ஒன்றரை லட்சம் பேரை உறுப்பினராகக் கொண்ட அமெரிக்க கருவூலத்துறை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை 8 மாதங்கள், வேலையே செய்யாமல் யாருக்கும் சம்பளம் தருவதற்கு, அதிபராக இருந்தாலும் டிரம்புக்கு அதிகாரம் கிடையாது என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். அமெரிக்க சட்டத்தின் கீழ், எந்தவொரு ஊழியரும் ஒரு வருடத்தில் 10 நாட்களுக்கு மேல் வேலை செய்யாமல் சம்பளம் பெற முடியாது; எனவே இது ஒரு போலியான ஆபர், இதை நம்பி ஊழியர்கள் யாரும் ஏமாந்து விட வேண்டாம் என்று சங்கத்தினரும் எதிர்கட்சியினரும் ஊழியர்களை எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Vijay D Ratnam
ஜன 30, 2025 17:06

தமிழ்நாட்டிலும் பதினாறு லட்சம் அரசு ஊழியர்கள் தேவையில்லை. பாதியாக குறைக்கலாம். எடுபிடி சாரி பியூன் என்ற போஸ்ட்டே தேவையில்லாத ஒரு ஆணி. அது போல அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒரு வகுப்பக்கு நூறு மாணவர்கள் என்று உயர்த்தவேண்டும். எதிர்காலத்தில் எ.ஐ தொழில்நுட்பத்தில் வகுப்பெடுக்கலாம். இப்படி நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும். எட்டு கோடி மக்கட்தொகை கொண்ட தமிழ்நாட்டில் பதினாறு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் மூன்று மடங்கு அதிகம் மக்கட்தொகை கொண்ட உத்திரபிரதேசத்தில் இருபத்தாறு கோடி மக்களுக்கு பதினாறு லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களை பாதியாக குறைக்கலாம். தமிழக மக்களின் வரிப்பணம் பெரும்பகுதி அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போவது சமூக அநீதி.


Rajarajan
ஜன 30, 2025 14:23

தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த மத்திய / மாநில அரசு ஊழியருக்கு இது உடனே தேவைப்படும் திட்டம். எட்டாவது ஊதிய கமிஷன் வந்த பிறகு, விலைவாசி உயர்வை நினைத்தால், தனியார் ஊழியருக்கு திகில் ஏற்படுகிறது என்பதே உண்மை. எனவே நஷ்டத்தில் இயங்கும் மற்றும் தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்களுக்கு இதை உடனே மத்திய / மாநில அரசு செயல்படுத்தவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.


Senthoora
ஜன 30, 2025 14:18

சேவை காலத்துக்கு ஏற்ற மாதிரி கொடுப்பனவு வழங்கலாம், 15 வேலை செய்திருந்தால் ஒருவருட கொடுப்பனவுக்கு ஒருவர் உரித்தாவார் என்பது பல மேல் நாடுகளில் சட்டம் இருக்கு. அத்துடன் அவரின் ANNUAL LEAVE மற்றும் LONG SERVICE LEAVE எல்லாம் கொடுக்கணும்.


Ramesh Sargam
ஜன 30, 2025 12:54

Voluntary Retirement System இந்தியாவில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இப்பொழுது அமெரிக்காவில் அமுல்படுத்த ட்ரம்ப் திட்டம். அந்த எட்டு மாத சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தி பன்னிரண்டு மாதமாக கொடுக்கலாம். மேலும், மற்ற பல retirement பெனிபிட்ஸ் கூட கொடுக்கப்படவேண்டும்.


vsc swamy
ஜன 30, 2025 12:20

மத்திய modi அரசில் ஏற்கனவே உள்ளது . 3 அதிகாரி ஐ பேப்பர் போட வைத்தால் GM பதவி


Sampath Kumar
ஜன 30, 2025 11:36

இது போன்று நிலைமை இங்கேயும் வரும் ஜி ஆட்சி தொடர்ந்தால்


Vijay
ஜன 30, 2025 13:23

சரி நீ குண்டு வைக்கிற வேலையை மட்டும் பாரு