உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிகாரத்தை கைவிடாவிட்டால் பேரழிவு: ஹமாஸூக்கு டிரம்ப் எச்சரிக்கை

அதிகாரத்தை கைவிடாவிட்டால் பேரழிவு: ஹமாஸூக்கு டிரம்ப் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ''காசாவில் அதிகாரத்தை விட்டு கொடுக்காவிட்டால் ஹமாஸ் பேரழிவை சந்திக்கும்; அந்த அமைப்பு முழுதாக அழிக்கப்படும்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக, 20 அம்ச திட்டத்தை அவர் முன்வைத்துள்ளார். 'ஹமாஸ் அமைப்பு அதிகாரத்தை விட்டுத் தர வேண்டும், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், காசாவின் எதிர்காலத்துக்காக புதிய நிர்வாகம் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மேலும், இஸ்ரேலுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஹமாஸ் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி, அமெரிக்க நேரப்படி, ஞாயிறு மாலை 6:00 மணி வரை கெடு விதித்திருந்தார். அந்த கெடு முடிவதற்குள் மீண்டும் ஹமாஸ் அமைப்புக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து அவர் கூறியதாவது: என் அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஹமாஸ் அமைப்புக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தருகிறேன். காசாவில் அமைதியை ஏற்படுத்த ஹமாஸ் உண்மையிலேயே விரும்புகிறதா என்பதை அறிய விரும்புகிறேன். இஸ்ரேல் பிணைக் கைதிகளை உடனடியாக ஹமாஸ் விடுவிக்க வேண்டும். பிணைக் கைதிகளை விடுவிக்கும் நாளாக அதை அறிவிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை எப்படியாவது அங்கு அமைதி நிலவ வேண்டும். காசா மீதான கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் ஹமாஸ் கைவிட வேண்டும். இல்லையெனில் அந்த அமைப்பு முழுதாக அழிக்கப்பட்டு விடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
அக் 06, 2025 14:33

பத்தாம் தேதி நோபல் அமைதி பரிசு அறிவிக்கிறார்கள். அதற்குள் என்னென்ன காமெடிகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ.


Sun
அக் 06, 2025 11:08

அடே அப்ரசெண்டுகளா? பல பேர் கைய புடிச்சு, கால புடிச்சு இந்த ஒப்பந்தத்த எடுத்திருக்கண்? இதுலயாச்சும் எனக்கு நோபல் பிரைஸ் வாங்கி கொடுங்க !இதையும் கெடுத்து விட்டுட்டு போயிராதிய அப்ரசெண்டுகளா!


c.mohanraj raj
அக் 06, 2025 09:00

இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்க செய்ய வேண்டும்


Rajasekar Jayaraman
அக் 06, 2025 05:45

போர் நிறுத்த ... உளறல்.


Kasimani Baskaran
அக் 06, 2025 04:08

தானே அழிந்தாலும் இஸ்ரேல் இருக்கக்கூடாது என்ற அடிப்படை வாத சிந்தனைதான் பிரச்சினைக்கு காரணம். காஸாவை பாதுகாப்பது அவர்கள் நோக்கம் அல்ல. ஹமாஸ் அழிவில் மட்டுமே இன்பம் காணும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.


visu
அக் 06, 2025 06:36

அவர்கள் மட்டும் அல்ல இஸ்லாமிய நாடுகளின் எண்ணமும் இஸ்ரேலை எப்படியாவது அழித்து விடவேண்டுமென்ற கனவுதான் அதர்க்கு பால்ஸ்தீனம் ஒரு கருவி அங்க காரணம் சுதந்திரம் அல்ல மதவெறுப்பு பலஸ்த்தீனம் என்ற நாடு உருவானால் மத்திய கிழக்குஇல் அமைதி நிலவாது அது ஒரு பெரும் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளிதான்


kamal basha
அக் 06, 2025 00:28

டெய்லி INTHA ROWDEY KU VEYRAY VALLAI ILLA


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை