உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 2020ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது: சொல்கிறார் புடின்

2020ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது: சொல்கிறார் புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: கடந்த 2020ம் ஆண்டு டிரம்ப்பின் தேர்தல் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், உக்ரைன் போர் வந்திருக்காது என ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தான் அதிபரானதும், ஒரே நாளில் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=304bqszd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ' நான் அதிபராக இருந்திருந்தால், இந்த போர் ஏற்பட்டிருக்கவே இருக்காது. இந்த அபத்தமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இதை எளிதாகவும் செய்யலாம். கடினமாகவும் செய்யலாம். ஆனால், எளிமையாக போரை நிறுத்துவதே சரியானது. தற்போதைய போர் அபத்தமானது. உடனடியாக அதை நிறுத்துவதற்கு ரஷ்யா முன் வர வேண்டும்' எனக்கூறியிருந்தார்.இந்நிலையில் புடின் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: 2020 தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி பறிக்கப்படாமல் இருந்திருந்தால், அப்போது அதிபராக இருந்திருந்தால் 2022 ல் உக்ரைன் போர் வந்திருக்காது. டிரம்ப் புத்திசாலி நபர் மட்டுமல்ல. ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. அமெரிக்காவின் உதவியுடன், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganesh Ragupathy
ஜன 26, 2025 06:21

டிரம்ப் ஐயா அவர்களின் உறுதி மற்றவருக்கும்,ஏனெனில் எல்லா நிலைகளையும் சீர்தூக்கிப் அப்போது தேர்வு சஞ்சய்குமார்.பலம் வாய்ந்த வல்லரசின் அதிபர் என்றவகையில் முழு பவரைப்பயன்படுத்தவாய்ப்பில்லாதகாலமாகயிருந்தது. க்கி


Ganesh Ragupathy
ஜன 26, 2025 06:14

இந்தியர்கள் வளர்ந்த நாடுகின்றனர் ஏணியாக உதவியுள்ளனர்,திடீரென குடியுரிமைச் ஈட்டித்தரும் அங்குமிங்கும் குழந்தைகளின் லினக்ஸ் அமல்படுத்துவதற்கான நல்லது.வேலைவாய்ப்பையும் குடும்பங்களின் லிங்கத்தின் பரிசீலிப்பது நல்லது அமெரிக்கப்படைகள் ஒருபோதும் குறையாது.


Laddoo
ஜன 25, 2025 13:58

மோசத்தால் பதவி பெற்றவர் பிடென். நேர்மையால் வெற்றி பெற்றவர் டிரம்ப். ஜிலேன்ஸ்கி என்கின்ற காமெடியனை உசுப்பி விட்டு குளிர் காய்ந்தது ஐரோப்பிய யூனியனிம் பிடெனும்தான்.


Ray
ஜன 25, 2025 05:13

அந்த தேர்தலில் ஆமை ஒன்று புகுந்ததாலேயே ட்ரம்ப் தோல்வியுற்றார் அதை சரியாக உணர்ந்த ட்ரம்ப் இன்று ஆமைக்கு சபையில் அனுமதியில்லை என்றார்


J.V. Iyer
ஜன 25, 2025 05:11

ஆஹா அருமையான கருத்து. ஹுசைன் ஒபாமாவுக்கு பதவிக்கு வந்து ஓரிரு மாதங்களில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கும்போது, ட்ரம்ப், புடின், நெட்டன்யாஹு, இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தால்தான் என்ன?


நிக்கோல்தாம்சன்
ஜன 25, 2025 04:53

அமெரிக்க மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர் , தமிழக மக்கள் இன்னமும்


Palanisamy T
ஜன 25, 2025 02:55

உங்களுக்கு கொஞ்சமும் கடவுள் நம்பிக்கை இல்லை. நீங்களொரு சர்வாதிகாரி கொஞ்சமும் மனச் சாட்சி யில்லாதவர். நீங்களா இப்படி பேசுவது 2020 - ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் போர் வந்திருக்காதா எப்படி எப்படி என்றுச் சொல்லுங்கள் போரை ஆரம்பித்ததே நீங்கள்தான். .டிரம்ப் இப்போதுதான் புது மாப்பிள்ளை .போகப் போகத்தான் அவர் யாரென்று தெரிய வரும். .


SANKAR
ஜன 25, 2025 07:37

America almost admitted Ukrain in NATO.This was the main issue. sa. Secondly arms supply and finance to Ukrain.Trump heavily criticised these when not in power


BalaG
ஜன 24, 2025 23:56

கேட்கவே எல்லையில்லா மகிழ்ச்சி.. தெளிவான பேச்சு மற்றும் சிந்தனை. அப்புறம் ஏன்யா இவ்வளவு இழப்பு, இறப்பு, சொல்ல முடியாத அவலங்கள். எது உங்களை அந்த நல்ல முடிவை எடுக்க விடாமல் தடுத்தது என்பதையும் தெளிவுபடுத்தினால் நல்லது. இனிமேலாவது போர் வருமுன் அதை தடுக்க முயற்சிக்கலாம்.


Bye Pass
ஜன 24, 2025 23:43

அத்தைக்கு மீசை முளைத்திருக்கவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை