ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை
புதுடில்லி : பெளர்ணமியை முன்னிட்டு, டில்லி க்யாலா ஜே.ஜே. காலனியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெய், பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.- நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன், புதுடில்லி.