உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை தண்டையார்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நிகழ்ச்சியில் வதம் செய்வதற்காக அரக்கனை மண் உருவத்தில் செய்தனர்.

16-02-2026 | 21:42


மேலும் இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராமத்தில் சாலையோரம் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பை கழிவுகள் வியாசபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

22-02-2026 | 08:37


அசாம் மாநிலம் குவஹாத்தியில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்,87-வது நிறுவன நாள் அணிவகுப்பு நடந்தது. இதையொட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவல்அல்லது கலவரம் போன்ற சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த சாகச ஒத்திகையை சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.

22-02-2026 | 08:32


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா பிப்ரவரி 15ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. முக்கிய விழாவான நடந்த தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேரில் எழுந்தருளி மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

22-02-2026 | 08:29


மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சட்ஜெலியா தீவில், சதுப்பு நிலக்காடுகளை உருவாக்கும் பணியில் உள்ளூர் கிராம மக்கள் ஈடுபட்டனர்.

22-02-2026 | 07:57


ஹிமாச்சல பிரதேசத்தின் மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் மண்டி நகரில் 7 நாட்கள் நடக்கும் மகா சிவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சர்வதேச கலாசார ஊர்வலம் நடந்தது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைக்குழுவினர் பங்கேற்றனர்.

22-02-2026 | 07:53


அசாமின் புகழ்பெற்ற போபிதோரா வனவிலங்கு சரணாலயத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இரண்டு ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன.

22-02-2026 | 07:48


தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் கலாபகஸ் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த புளோரியானா தீவிற்கே உரித்தான பூர்வீக இனமான இளம் ராட்சத ஆமைகள், மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் விடப்பட்டன.

22-02-2026 | 07:42


மஹாராஷ்டிராவின் மஞ்சள் மையம் என்று அழைக்கப்படும் சாங்லியில் மஞ்சள் அறுவடைப் பணிகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளன.

22-02-2026 | 07:39


மதுரையில் தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க தேனியில் இருந்து கட்சியினரை அழைத்து சென்ற அரசு பஸ்களில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது.

21-02-2026 | 19:08