உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / உணவு / தேங்காய் பால் கோழி குழம்பு!

தேங்காய் பால் கோழி குழம்பு!

தேங்காய் பாலில் கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

அரை கிலோ கோழி கறிஒரு கப் நறுக்கிய சின்ன வெங்காயம்இரண்டு தக்காளிமூன்று பச்சை மிளகாய்ஒரு காய்ந்த மிளகாய்கறிவேப்பிலை ஒரு கொத்து3 டீஸ்பூன் சிக்கன் துாள்ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்அரை டீஸ்பூன் கடுகுஒரு கப் தேங்காய் பால்உப்பு, எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு நன்கு தாளித்து கொள்ளவும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், தக்காளியை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கி கொள்ளவும்.தக்காளி வதங்கிய பின் கோழிக்கறியை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு, சிக்கன் மசாலா பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.கறி முக்கால் பதத்திற்கு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பத்து நிமிடத்திற்கு பின் குழம்பு பதத்திற்கு வந்தபின் அடுப்பை 'ஆப்' செய்யவும். தேங்காய் பால் கோழி குழம்பு ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை