/ டெக்னாலஜி / ஸ்டார்ட்அப்கள் / பெருநகரங்களுக்கு இணையாக நிதியை குவிக்கும் 2ம் கட்ட நகர ஸ்டார்ட்அப்கள்!
பெருநகரங்களுக்கு இணையாக நிதியை குவிக்கும் 2ம் கட்ட நகர ஸ்டார்ட்அப்கள்!
சர்வதேச பொருளாதார மந்தநிலையால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பெரிய நிறுவனங்களுக்கு இணையாக இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப்களும் அதே சராசரி அளவு நிதியை திரட்டியுள்ளன. 2023ன் முதல் அரையாண்டில் சிறு நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் திரட்டிய நிதி ரூ.1,952 கோடி. இதில் சராசரி டீல் மதிப்பு ரூ.42 கோடி. பெரிய நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் பெற்ற சராசரி டீல் மதிப்பு ரூ.43 கோடி. இருப்பினும் அதிக ஒப்பந்தங்களை பெருநகர நிறுவனங்களே கைப்பற்றியுள்ளன. அதற்கு காரணம் அதிக நிறுவனங்கள் டில்லி, நொய்டா, பெங்களூரு, ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களில் துவங்கப்படுவது தான். ஆனால் இரண்டாம் கட்ட நகரங்களிலில் இருந்து யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக வரும் காலங்களில் வாய்ப்பு உள்ளது.