குறைந்த செலவில் மழை நீரை வடிகட்டி சேமிக்கும் எளிய முறை
மழை நீரை தேக்கி வைக்காவிட்டால் அது அப்படியே வழிந்தோடும். ஆனால் அவற்றில் வண்டல் மண் படிந்திருக்கும். அந்த தண்ணீரை சேமிப்பதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிகட்டி அமைத்துள்ளது. இந்த வடிகட்டி ஒரு நிமிடத்துக்கு 2 லிட்டர் வீதம் தண்ணீரை சுத்தப்படுத்தி சேமிக்க முடியும். மழைநீரை சுத்தப்படுத்தி தேக்கி வைப்பதின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இத்தகைய நிலத்தடி நீரை சேமிக்கும் முறை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 24, 2024