வறண்ட குளம் தரிசாகும் விவசாய நிலம் | Coimbatore
கோவை அருகே 40 ஏக்கர் பரப்பளவில் தொட்டியம் குளம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் குளத்தில் ஓரு சொட்டு நீர் கூட இல்லை. இந்த குளத்துக்கு வரும் மழை நீர் வழிபாதைகள் அடைபட்டுள்ளன. இதனால் இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இந்த குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் குறைந்த அளவு தண்ணீரே விடப்பட்டது. தற்போது சுற்று வட்டார பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. எனவே குளத்துக்கு வரும் நீர்வழிப்பாதைகளை துார் எடுத்து சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.
பிப் 06, 2024