திரளான பக்தர்கள் பங்கேற்பு | vaitheeswaran Kovil Darshan
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இங்குள்ள முத்துக்குமாரசாமி கோயிலில் கார்த்திகை தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இன்று ஆனி கார்த்திகையை முன்னிட்டு கார்த்திகை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஜூலை 02, 2024