/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ வைகையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு | banks of Vaigai Flood Warning
வைகையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறப்பு | banks of Vaigai Flood Warning
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் பூர்வீக பாசன வசதிக்காக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று முதல் 4 நாட்களுக்கு மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 8,509 ஏக்கர் பாசன வசதி பெறும். வைகை ஆற்றின் கரை தொட்டபடி தண்ணீர் சீறிப்பாய்வதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மே 16, 2024