உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / பிரதான பக்தர்கள் சுவாமி தரிசனம் | Thiruvallur|Kandaswamy Temple Kumbabhishekam

பிரதான பக்தர்கள் சுவாமி தரிசனம் | Thiruvallur|Kandaswamy Temple Kumbabhishekam

திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கந்தஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ம் தேதி வேம்புலியம்மன் , பொன்னியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. 6ம் தேதி கணபதி ஹோமம், 7 ம் தேதி முதல்கால யாக பூஜை நடைபெற்றது. காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க கந்தசாமி, ஆறுமுகசாமி மற்றும் கிராம தேவதைகளான வேம்புலியம்மன் , பொன்னியம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்கர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை