உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / தாயுமான சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் | Trichy | Thayumana Swamy temple | muthukumaraswamy

தாயுமான சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் | Trichy | Thayumana Swamy temple | muthukumaraswamy

தாயுமான சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் / Trichy / Thayumana Swamy temple / muthukumaraswamy / Thirukalyanam திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பங்குனி விசாகத்தையொட்டி முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள், மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மேளதளங்கள் முழங்க வள்ளி, தெய்வானை சமேதருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ