காரில் போன 5 பேருக்கும் ஸ்பாட்டில் சோகம் | Karur Accident | Car Accident
கோவை மாவட்டம் குனியமுத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ். மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருணுடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கிளம்பினார். ஈரோடு வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு காரை ஓட்டி சென்றார். கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் குளித்தலை தாண்டி சென்ற போது எதிரே திருப்பூர் நோக்கி வந்த பஸ் மோதியாது. முழு காரும் பஸ்ஸுக்கு அடியில் சிக்கி அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த செல்வராஜ், அவரது மனைவி, மகன், மகள், டிரைவர் என 5 பேரும் ஸ்பாட்டில் இறந்தனர்.
பிப் 26, 2025