/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் பயங்கரவாதி மசூத் அசார்! India | Pakistan | Terrorist activities
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் பயங்கரவாதி மசூத் அசார்! India | Pakistan | Terrorist activities
ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை நடந்த தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 12 வீரர்கள் மற்றும் 10 மக்கள் இறந்துள்ளனர். 55 பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் போர்வையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத்துறை கூறுகிறது. ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இதன் தலைவரான மசூத் அசார், ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இவர் பாகிஸ்தான் சிறை மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாயின.
ஜூலை 18, 2024