/ தினமலர் டிவி
/ பொது
/ நவராத்திரி கொலுவுக்கு தயாராகும் கோவை மக்கள் Kolu | Covai Town hall | Khadi Craft
நவராத்திரி கொலுவுக்கு தயாராகும் கோவை மக்கள் Kolu | Covai Town hall | Khadi Craft
அக்டோபர் 3-ல் நவராத்திரி விழா தொடங்குகிறது. வீடுகளில் கொலு வைக்க கோவை மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய பொம்மைகளை வாங்கி கொலுவில் வைப்பது அவர்களது வழக்கமாக இருக்கிறது. கோவை டவுன் ஹால் காதி கிராப்டில் வித விதமான கொலு பொம்மைகளின் கண்காட்சியும், விற்பனையும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கின்றன. மண் மற்றும் டெரகோட்டாவில் செய்யப்பட்ட பொம்மைகள், தசாவதார செட், ராமாயணம், மகாபாரத கதாபாத்திரங்களின் கொலு பொம்மைகள், சீதா கல்யாண திருமண செட், பறவைகள், பல வகை உயிரின பொம்மைகள் என பல வகையான கொலு பொம்மைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
செப் 16, 2024