/ தினமலர் டிவி
/ பொது
/ தட்டிக்கேட்ட பாஜவினருக்கு தண்டனையா? அண்ணாமலை கேள்வி Palani bjp protest Dindigul bjp functionaries ka
தட்டிக்கேட்ட பாஜவினருக்கு தண்டனையா? அண்ணாமலை கேள்வி Palani bjp protest Dindigul bjp functionaries ka
பழனியில் உள்ள தனியார் பாரில் காலையிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதை வீடியோ ஆதாரத்துடன் பாஜ நிர்வாகிகள் அம்பலப்படுத்தினர். பார் மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜ நிர்வாகிகள் கனகராஜ், செந்தில்குமாரை பழனி போலீசார் கைது செய்துள்ளதாக, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனியார் மதுக்கடையை காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் பழனி கனகராஜ் ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தினார்.
ஜன 05, 2025