உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்தார் ஹரிணி அமரசூரியா India - Sri Lanka

இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்தார் ஹரிணி அமரசூரியா India - Sri Lanka

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டில்லி ஏர்போர்ட்டில் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அந்நாட்டின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றார். டில்லி பல்கலையின் கீழ் இங்கும் ஹிந்து காலேஜ் முன்னாள் மாணவியான ஹரிணி, இலங்கை பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். 3 நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள ஹரிணி, பிரதமர் மோடியை சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். இலங்கையின் கல்வி அமைச்சராகவும் உள்ள ஹரிணி, டில்லி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, கல்வித்துறை சார்ந்த தொழில்நுட்ப பகிர்வு குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தான் படித்த ஹிந்து காலேஜுக்கு செல்லவிருக்கும் ஹரிணி, அங்கு மாணவர்களுடனான நிகழ்ச்சியில் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடுகளுடனான நட்புக்கு முக்கியத்துவம் என்ற நம் வெளியுறவு அமைச்சக கொள்கையின் அடிப்படையில், இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேம்பாடு, பாதுகாப்பு, தொழில், வர்த்தகம் குறித்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கை பிரதமர் ஹரிணி பேச்சு நடத்த உள்ளார்.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை