/ தினமலர் டிவி
/ பொது
/ ஏஆர் டெய்ரி இயக்குனர் உட்பட 4 பேர் சிறையிலடைப்பு Tirupati laddu row CBI led SIT arrest 4 arrested
ஏஆர் டெய்ரி இயக்குனர் உட்பட 4 பேர் சிறையிலடைப்பு Tirupati laddu row CBI led SIT arrest 4 arrested
திருப்பதி லட்டு தயாரிக்கும் பணிக்கு விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் சப்ளை செய்யப்பட்ட விவகாரம் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இது இந்துக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமைத்தார். அதற்கு பதிலாக சுப்ரீம் கோர்ட், சிபிஐ தலைமையிலான புதிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அக்குழுவில் சிபிஐ அதிகாரிகள் இருவர், ஆந்திர போலீஸ் அதிகாரிகள் இருவர், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
பிப் 10, 2025