/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிப்ரவரி முதல் வாரம் பார்லியில் அறிக்கை தாக்கல் | JPC |clears waqf bill | accepts 14-amendments
பிப்ரவரி முதல் வாரம் பார்லியில் அறிக்கை தாக்கல் | JPC |clears waqf bill | accepts 14-amendments
வக்பு சட்ட திருத்த மசோதா தயார் காங், திமுக கோரிக்கை நிராகரிப்பு 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் நாடு முழுவதும் வக்பு வாரியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகளை நிர்வகிக்க மத்திய அரசு 1954ல் வக்பு சட்டத்தை இயற்றியது. அதில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தொடர்ந்து வக்பு வாரியங்களின் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்த வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு பார்லிமென்ட் மழைக்கால கூட்ட தொடரில் வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள், முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜன 27, 2025