/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பரபரப்பான சூழலில் நடந்த ஜனாதிபதி - பிரதமர் சந்திப்பு PM Modi | President Draupadi
பரபரப்பான சூழலில் நடந்த ஜனாதிபதி - பிரதமர் சந்திப்பு PM Modi | President Draupadi
ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்ட்ரபதி பவனில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி மாளிகை போட்டோ பதிவை வெளியிட்டது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. பிரதமரின் சமீபத்திய வெளிநாட்டு பயணம், சுதந்திர தின விழா கொண்டாட்டம், துணை ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அவர் ஜனாதிபதியுடன் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆக 03, 2025