உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்களின் கடைசி எதிர்பார்ப்பை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா: நயினார் நாகேந்திரன் கேள்வி! Nainar Nagendran |

மக்களின் கடைசி எதிர்பார்ப்பை ஸ்டாலின் நிறைவேற்றுவாரா: நயினார் நாகேந்திரன் கேள்வி! Nainar Nagendran |

தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்கும் போர்வையில், காவல் துறையின் மிருகத்தனமான அத்துமீறல்களும், லாக்-அப் மரணங்களும் தான் தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை புழல் சிறையில், 304 கைதிகளுக்கு எலும்பு காயங்கள் ஏற்பட்டதற்கு, வழுக்கும் கழிப்பறைகளே காரணம் என, தி.மு.க. அரசால் சாக்கு சொல்லப்பட்டது. 2022ல், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், ஐந்து குற்றவாளிகளின் பற்களை உடைத்து, அத்துமீறலில் ஈடுபட்ட போது, தி.மு.க. அரசு கண்மூடி வாய் பொத்தி இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, 109 லாக்-அப் மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும், போலீசாரின் வன்முறையால் காவல் நிலையத்தில் வைத்தே, 2022ல் சென்னையில், 25 வயது இளைஞர்; திருவண்ணாமலையில், 47 வயது நபர்; 2023ல் தென்காசியில், 23 வயது தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு, காவல் துறையின் அத்துமீறல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மறுபுறம், போதை பொருள் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் ஜாதிய வன்முறை என, குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்படி எல்லாம் சட்டம் - ஒழுங்கு, தமிழகத்தில் சந்தி சிரிக்க காரணம், காவல் துறையை, தி.மு.க. தன் சொந்த ஏவல் வேலைகளுக்கு பயன்படுத்துவது தான் என்பது, அனைவரும் அறிந்த உண்மை. முதல்வர் ஸ்டாலின், இனியாவது காவல் துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை அடக்கி, சட்டம் - ஒழுங்கை சீர்செய்வாரா என்பதே, மக்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி எதிர்பார்ப்பு. எனவே மேடைதோறும், அமைதிப்பூங்கா தமிழகம் என முழங்குவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தி.மு.க. அரசு, முதலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைய வேண்டும், என அவர் கூறி உள்ளார்.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ