/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசியல் உள்நோக்கத்துடன் என் பேச்சை திரிக்கின்றனர்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு | Durgapur Gang Rape
அரசியல் உள்நோக்கத்துடன் என் பேச்சை திரிக்கின்றனர்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு | Durgapur Gang Rape
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவி, மர்ம கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றவாளிகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வரும் நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், துர்காபூர் விரைந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், நண்பர்கள், போலீசாரிடம் விசாரித்தார். இது குறித்து, தேசிய மகளிர் ஆணைய தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறினார்.
அக் 12, 2025