அச்சுறுத்தல் இருப்பது போலீசுக்கு தெரியும் | Erode | Sivagiri
ஈரோடு சிவகிரி விலாங்காட்டு வலசை சேர்ந்தவர் ராமசாமி, வயது 75. இவரது மனைவி பாக்கியம், வயது 65. தம்பதிக்கு கவிசங்கர், பானுமதி என்ற ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் அவர்களது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் மகன் கவிசங்கர் செல்போனில் பேச அழைத்துள்ளார். தந்தை ராமசாமி போன் எடுக்காததால் அவருக்கு சந்தேகம் வந்தது. உறவினர்களை அழைத்து வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி உள்ளார். உறவினர்கள் ராமசாமி வீட்டுக்கு சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது.
மே 02, 2025