ஆனந்த் டிரா
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 10ஆவது மிக்கைல் டால் நினைவு செஸ் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் ஆனந்த், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றார்கள். இதன் 8ஆவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சிக்கு எதிராக 'டிரா' செய்தார். முடிவில், 2 வெற்றி, 5 'டிரா', ஒரு தோல்வியுடன், 4.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், மூன்றாவது இடம் பெற்றார்.