பட்டினி அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியாவில், மூன்றில் ஒரு குழந்தை, உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், எடை மற்றும் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையை வைத்து, உலக பட்டினி விகிதக் குறியீடு (Global hunger index) தயாரிக்கப்படுகிறது. 2016க்கான அறிக்கையின்படி, இந்தியாவில் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளில், 38.7 சதவீதம் பேர், போதுமான உணவில்லாமல், உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளார்கள். பட்டினி ஒழிப்பில், அண்டை நாடுகளான சீனா, நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளை விட, இந்தியா பின்தங்கி உள்ளது.