இட்லி, தோசை - முதலில் வந்தது எது?
வாரத்தின் ஏழு நாட்களில் நிச்சயம் ஐந்து நாட்களாவது இட்லி, தோசை சாப்பிடுகிறோம். இதற்கான தயாரிப்பு எளிமையானது. அரிசி மற்றும் உளுந்தை நான்கு ஆழாக்குக்கு ஓர் ஆழாக்கு என்கிற விகிதத்தில் கலந்து, ஊறவைத்து மாவாக்கப்படுகிறது. பின்னர் இந்த மாவில் தேவையான அளவு உப்பைச் சேர்த்து ஓர் இரவு முழுக்கப் புளிக்க வைக்கப்படுகிறது. பின்னர் இந்த மாவை ஆவியில் வேகவைத்து எடுத்தால் இட்லி தயார். இதே மாவை தோசைக்கல்லில் ஊற்றி எண்ணெய் விட்டு சுட்டால் தோசை ரெடி. இந்த தோசை ஊற்றுவதிலும், ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு மாதிரி எனலாம். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தோசை சற்று தடிமனாகவும் அளவில் சிறியதாகவும் ஊத்தப்பம் போல் இருக்கும். அதுவே, கர்நாடகத்தில் மெலிதாக, பெரிய அளவில் தோசைகள் ஊற்றப்படுகின்றன. அதன் உள்ளே மசித்த உருளை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை கொண்ட மசாலா தோசையாகவும் அவர்கள் தயாரிக்கிறார்கள். இதற்குத் தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது தேங்காய் சட்னி நன்று. ஆம்! கர்நாடகம்தான் மசாலா தோசையின் தாயகம். இன்று உலகம் முழுவதிலும் உள்ள தென்னக உணவகங்களில் மசாலா தோசை இல்லாமல் இருக்காது.ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ்ச் சங்க இலக்கியங்களில் தோசை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. தோசை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் வந்த நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகே, இட்லி பற்றிய குறிப்புகள் கன்னட இலக்கியங்களில் வெளிவந்தன. பழமையான மொழி இலக்கியங்களில் தோசை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.