விரைவில் ஷரபோவா
ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. 'மேல்டோனியம்' என்ற ஊக்கமருந்தைப் பயன்படுத்தி சிக்கிய இவருக்கு, இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஷரபோவா சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்.) அப்பீல் செய்தார். விசாரணை முடிவில், ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்ட தடை, 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டன. வரும் 2017ல் ஏப்ரல் 26 முதல் ஷரபோவா, மீண்டும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம்.