உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / வாரிசுகளுக்கு வளமான நாடு: மக்களுக்கு வறட்சியான காடு

வாரிசுகளுக்கு வளமான நாடு: மக்களுக்கு வறட்சியான காடு

தமிழக தேர்தல் களத்தை பார்க்கும்போது, வேதனையும், வெறுப்பும் ஏற்படுகிறது. கடந்த 1967 தேர்தல் முதல், 1996 தேர்தல் வரை, தமிழகத்தில் ஆட்சி புரிந்த இரண்டு திராவிட கட்சிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வராமல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பார்த்துக் கொண்டனர்; அவர்கள் மறைவுக்குப் பின், நிலைமை தலைகீழ். கோடி கோடியாக சொத்து சேர்த்திருப்பவர்களுக்கு தான், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது.துாத்துக்குடி வேட்பாளர் சொத்து மதிப்பு, 57 கோடி. திருச்சி வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு, 35 கோடி. வேலுார் வேட்பாளர் சொத்து, 152 கோடி. விருதுநகரில், சினிமா நடிகர் விஜயகாந்த் மகனுக்கு 17.5 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. சாதாரண டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு ஊழியர்கள், இதுபோல கோடிகளில் சொத்து வைத்திருப்பரா என்பது சந்தேகமே. இந்த வாரிசு அரசியலால், எதிர்காலத்தில் நம் மாநிலம், சோமாலியா போல் ஆகிவிடும் என்பது நிச்சயம்.

வாரிசுகள் வளர்ச்சி

ஆளுங்கட்சிகளின், 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' மூலமாகச் சேர்ந்த வானளாவிய தேர்தல் நிதியைப் பாதுகாக்க, தம் ரத்த உறவுகளை நிதிக் காவலர்களாகவும், நிதியை நிர்வகிப்பவர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் நியமிப்பர். கட்சியில் உள்ள மற்றவர்களை புறந்தள்ளி ஒதுக்கி விடுவர். இதற்காகவே, வாரிசுகளுக்கு கட்சிப் பதவி, அரசு பதவி கொடுத்து, பட்டம் சூட்டி விடுவர்.தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட கட்சியினர், தம் குடும்பக் கட்டுப்பாட்டில் கட்சியைக் கையகப்படுத்தி, நாய்க்கு எலும்புத் துண்டு போடுவது போல ஒரு, 'அமவுன்ட்' ஒதுக்கி, பொருளாளர் பதவிக்கு வெளியாட்களை நியமிப்பர்; பொருளாளரும், தனக்கும், தன் வாரிசுக்கும் ஏதோ பதவி கிடைத்தால் போதும் என்று வாய்மூடி மவுனியாகி விடுவார்.ஒவ்வொரு தேர்தலின்போதும், கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து, கட்சி, 'ஓனர்'களுக்கு, கனகச்சிதமாக, கணிசத்துக்கும் அதிகமாகவே பணம் வந்து சேர்ந்து விடும். கம்பெனிகளின் லாப நஷ்டத்தைக் கண்காணிக்க, கட்சி தலைமையகத்தில் சிலர் பணிஅமர்த்தப்பட்டிருப்பர். இவர்களுக்கு மேல், 'வசூல் ராஜா கமிட்டி'யினர் இருப்பர்; யாரிடத்தில், எப்போது, எப்படி வசூலிப்பது என்று திட்டம் போட்டு தயாராக இருப்பர்.வரும் பல்லாயிரக்கணக்கான ரூபாய், மனைவி மற்றும் மக்களுக்குத் தெரியாத, அறியாத நபர்களின், 'டிரஸ்ட்' பெயரில் போட்டு விடுவர். அளவற்ற கோடிக்கணக்கான பணத்தை, நிதி ஆலோசகர் மூலமாக, அதிக லாபம் ஈட்டும் பண்டுகளில் முதலீடு செய்து, பணத்தை இரட்டிப்பு செய்வர். மனைவி, மக்களின் பிறந்த நாள், கட்சிக் கூட்டம், தேர்தல் நேர செலவு, விளம்பரம், திரளும் மக்களுக்கு கைக்கூலி, உணவு என, டாம்பீகமாக செலவு செய்வதெல்லாம், இந்தப் பணத்திலிருந்து தான்!

வசூலிப்பு முறை

சிறிய சாலையோர கடைகள், கையேந்தி பவன்கள், ஐஸ்கிரீம் - ஜூஸ் - டீ - பழம் - காய்கறி விற்கும் சிறிய வியாபாரிகளிடம் மாதாந்திர வசூல் செய்வதை, கீழ்மட்ட, பகுதி வட்ட செயலர், மாவட்ட செயலரோடு பகிர்ந்து கொள்வர்நகரில், பெரிய துணிக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் தொகை, கட்சித் தலைமை வரை செல்லும்; இது அடிக்கடி நடக்கும்.தேர்தல் காலங்களில், 100 முதல் 1,000 கோடி ரூபாய் வரையும், லாபத்தில் 8 சதவீதமும் நேரடியாக தொழிற்சாலைகளிலிருந்து வசூலித்து விடுவர். எதிர்க்கட்சிக்குத் தெரியக் கூடாது என்று கருப்புப் பணமும் பரிமாறப்படும். இதைத் தடுக்கத்தான் தேர்தல் பத்திரம் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டது; சுப்ரீம் கோர்ட் அதற்கு தடை விதித்து விட்டதுஅடுத்த கலெக் ஷன், அரசு ஊழியர் வேலை கேட்டு வருவோரிடமிருந்தும், பணியிட மாற்றம், பணி உயர்வு ஆகியவற்றுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களிடமிருந்தும் கிடைப்பது. இதைச் சொன்ன உடனே, அனைவருக்கும், சிறையில் இருக்கும் அமைச்சரின் உருவம், 'பளிச்'சென வந்து சென்றால், அதற்கு நான் பொறுப்பல்ல!அடுத்த கலெக் ஷன், சாலை போடுவதற்கான கான்ட்ராக்ட் விடும்போது மொத்த தொகையில், 30 சதவீதம் கமிஷன். அரசியல்வாதிகள், தன் மனைவி, மக்கள் பெயரிலேயே உரிமம் வாங்கி, கான்ட்ராக்டர்களுக்கு அதை விற்று விடுவர்; கொள்ளை வசூல் போதை மருந்து தயாரிக்கும், வினியோகிக்கும் வியாபாரிகளிடமிருந்து வரும் பணம்.

ஆயுத வியாபாரிகளிடமிருந்து வரும் பணம்

எதிரி நாட்டு தீவிரவாதிகள், இங்குள்ள தன் சகாக்களை விடுவிக்க, இங்குள்ள கட்சிகளுக்கு பணத்தை வாரி இறைப்பதன் மூலம், வசூலாகும் லஞ்சம். இந்த விஷயத்தில் தான் திஹார் சிறையில் ஒரு வி.ஐ.பி., சமீப காலமாக அடைபட்டு கிடக்கிறார். வெளிநாட்டு அரசுகளுக்கு சாதகமாக எழுதுவதற்காக, காசு வாங்கும் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டமும் உண்டு. எனவே, தேர்தல் என்றால், அரசியல் கட்சிகளுக்கு திருவிழா போல! வசூலிப்பு ஒரு பக்கம், வாக்காளர்களுக்கு அதிலிருந்து கிள்ளிக் கொடுப்பது ஒரு பக்கம்.ஆக... அட்சய பாத்திரமான வசூலிப்பு பணத்தைப் பாதுகாக்க, வாரிசுகளை நம்பாமல், வேறு யாரை நம்புவது! வாழ்க வளமாக வாரிசு அரசியல்; வறண்டு போக மக்கள் வாழ்வு!டாக்டர் சு.அர்த்தநாரிஇதய ஊடுருவல் நிபுணர்

தொடர்புக்கு

மொபைல்: 9884353288இ- மெயில்: prabhuraj.gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kuppan
மே 15, 2024 16:07

அரசியல் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டி இடுவதற்கு தடை கொண்டு வரவேண்டும், எப்பொழுதோ நடந்த சாதி கொடுமைக்கு இப்பொழுது இட ஒதுக்கீடு கொடுகிறோம் அது சமூக நீதி, அதே போல் சாதாரண மக்கள் இப்பொழுது தேர்தலில் நின்று பெரும் பணம் படைத்த அரசியல் வாரிசுகலை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியம் ஆகி விட்டது இதுவும் ஒரு வகையில் சமூக அநீதி எப்பொழுதோ உயர் சாதி மக்கள் மட்ட சாதி மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு நீதியாய் ஒன்றும் தெரியாத அவர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு மூலம் மறுத்தாலும் சமூகத்தில் அது ஒரு சமூக நீதியாக பார்க்க படுகிறது, அதே போல் பணம் படைத்த அரசியல் வாரிசு களுக்கு ஒரு தேர்தலில் நிற்க்க ஒரு தடை சட்டம் கொண்டு வந்து அனைவரும் தெரிதலில் நின்று வெற்றி பெற வாய்ப்பை உருவாக்கி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்


Kuppan
மே 17, 2024 10:44

மற்ற சாதி


Sampath Kumar
மே 15, 2024 08:59

இந்த செய்தி போட்டு மாசம் ஆகி விட்டது வாரிசுகளும் படித்து அவர்கள் வாரிசுகளும் படிக்கும் வரை இந்த செய்தி வரும் போல மருத்துவர் அய்யா இம்புட்டு பேசுறார் அவர்களை யாருக்காவது இலவசமாக வைத்தியம் பார்பரா கேட்டு சொல்லுங்க


Barakat Ali
மே 11, 2024 09:47

அதிகாரத்தின் ஊழலை தட்டிக்கேட்டவருக்கு கைகாலை உடைக்கவேண்டுமாயின்


K.Balasubramanian
ஏப் 26, 2024 06:13

இந்த பதிவில் வேட்பாளர் சொத்து மிகவும் குறைவாக சொல்லப்பட்டுள்ளது உண்மையில் அது நூறு மடங்கை தாண்டும் தமிழகத்தை ஆண்ட , சுரண்டிய தில்லு முள்ளு கழகங்கள் சொத்து லட்சம் க்ஹோடிகளை மிஞ்சும் ஸ்ரீலங்கா போன்ற புரட்சி நடந்தால் மட்டுமே , நிலைமை சரியாகும் அதோடு , கட்சிகளின் தலைமை பொருளை காக்க , சட்ட விதிகள் திருத்த பட்டு , தலைமை பொறுப்பில் உள்ளவர் வாரிசுகள் புறக்கணிக்கப்படும் விதமாக , கட்சி விதிகள் உருவாக்க படவேண்டும் தில்லு முள்ளு கழகங்கள் இன்னும் சில ஆண்டுகள் பதவியில் இருந்தால் , லண்டன் , துபாய் , சிங்கப்பூர் , மலேசியா , கலிபோர்னியா , போன்ற இடங்களில் சொத்து மதிப்பு இன்னும் அதிகரிக்கும் இது தான் திராவிட கொள்ளை மாடல் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் , என்பது , " எங்கும் ஊழல் , எதிலும் ஊழல் " , என்று மாறிவிட்டது அரசியல் என்பது , " கொள்ளையர்களின் கூடாரம் " "எதையும் தாங்கும் தமிழன் , என்றும் தூங்கும் தமிழன் " ,ஆகிவிட்டான்


N Annamalai
ஏப் 19, 2024 06:12

இதற்கு ஒரு புரட்சி வருமா ?


sugumar s
ஏப் 18, 2024 16:03

மக்கள் ஒரு சில ஆயிரங்களை விலை போயிட்டாங்க இந்த நிலை மாறினால் தான் மக்களுக்கு நல்லது நடக்கும் மாறாதவரை அரசியல் வாரிசுகளுக்கு கொண்டாட்டம் தான் மக்கள் வரி பணத்தில் அவர்களின் ஏக போக வாழ்க்கை உறுதி


skv srinivasankrishnaveni
ஏப் 18, 2024 08:36

என்னாதிது புதுசா திமுக Eப்போது முகவசம்போச்சுதோ அன்னிக்கே முடிவாயிட்டுது தமிழ் மக்கள் ஓஸிக்கே பறக்கும் KOOட்டங்கள்


புதிய வீடியோ