எகிப்தில் நட்புறவு கபடி போட்டி
கெய்ரோ : எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ நகரில் இந்திய - எகிப்து நாட்டின் ஆண், பெண் அணிகளுக்கு இடையிலான நட்புறவு கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியை இந்திய தூதர் அஜித் வி குப்தே தொடங்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்கி கௌரவித்தார். எகிப்து நாட்டில் கபடி விளையாடும் பழக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா