உள்ளூர் செய்திகள்

மஸ்கட்டில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் இந்திய தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையின் முக்கிய பகுதிகளை வாசித்தார்.விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.- நமது செய்தியாளர், காஹிலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !