ஈராக் : இந்திய தூதருக்கு பிரிவு உபசார விழா
பாக்தாத் : ஈராக் நாட்டின் எர்பில் பகுதியில் இந்திய தூதர் பிரசாந்த் பிசேவுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது பேசிய இந்திய தூதர், இந்திய சமூகத்தினருக்கு சிறப்பான சேவையை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார். இந்திய தூதருக்கு இந்திய சமூகத்தினர் நினைவுப் பரிசு வழங்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா