உள்ளூர் செய்திகள்

கத்தாரில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்

தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் நடந்தது. மாதந்தோறும் நடைபெறும் இந்த முகாமுக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். அவருடன் தூதரக அதிகாரிகள் பங்கேற்று தொழிலாளர்களின் குறைகளது அடிப்படையில் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்த முகாமில் இந்திய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த முகாமை இந்திய சமூகத்தினர் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்