உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயம் சார்பில் ஒரு லட்சம் வெள்ளி நன்கொடை

ஒவ்வொரு பண்டிகையையும் பன்முகக் கலாச்சாரமாகக் கருதி ஒன்றிணைந்து கொண்டாடுவதுதான் சிங்கப்பூரின் வழிமுறை. இது போல் தீபாவளி ஒளியூட்டு விழா கடந்த செப்-6 ஆம் தேதி துவங்கியது. லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் பங்கேற்றார். விழாவில் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத் தலைவர் சுரேஷ்குமார் “ அதிபர் சவால் “ திட்டத்திற்கு நன்கொடையாக ஆலயத்தின் சார்பாக ஒரு லட்சம் வெள்ளி காசோலையை பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். விழாவில் பங்கேற்ற பிரமுகர்கள் பாராட்டி வாழ்த்தினர்.--- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்