நெப்ராஸ்கா மாகாணத்தில் டிச.,6 காந்தி தினமாக அறிவிப்பு
நெப்ராஸ்கா மாகாணதத்தின் இந்திய சமுதாயத்திற்கு டிசம்பர் 6 முக்கியமான நாள்! நெப்ராஸ்கா மாகாண ஆளுநர் ஜிம் பில்லென் (Governor Jim Pillen) டிசம்பர் 6-ஆம் தேதியை அதிகாரப்பூர்வமாக காந்தி தினமாக அறிவித்தார். இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆளுநர் ஜிம் பில்லென் லிங்கனில் உள்ள நெப்ராஸ்கா மாகாண தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகத்தில் காந்தி சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை சீயாட்டிலில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைதூதர் பிரகாஷ் குப்தாவின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வினை டாக்டர் கங்காத முன்னிருந்து ஒருங்கிணைத்தார் இந்திய சமூகத்தின் சார்பில் ஆளுநர் ஜிம் பில்லென், பிரகாஷ் குப்தா மற்றும் டாக்டர் கங்காதர் ஆகியோருக்கு இந்திய சமூகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. - நமது செய்தியாளர் சிதம்பரநாதன் அழகர்