சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!
கடந்த 2001ம் ஆண்டு அஜித் நடிப்பில் 'தீனா' என்ற படத்தை இயக்கி அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், அதையடுத்து 'ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2020ம் ஆண்டில் ரஜினி நடிப்பில் அவர் இயக்கிய 'தர்பார்' மற்றும் இந்த ஆண்டு மார்ச்சில் சல்மான்கான் நடிப்பில் அவர் இயக்கி வெளியான 'சிக்கந்தர்' என்ற இரண்டு படங்களும் தோல்வி அடைந்து விட்டன.
என்றாலும் அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கி கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியான 'மதராஸி' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், அடுத்தபடியாக சிம்புவுக்கு ஒரு கதை தயார் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் சிம்பு நடிக்கும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு அவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு வரும் ஏ ஆர் முருகதாஸ், தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிம்பு நாடு திரும்பியதும் அவரை சந்தித்து கதை சொல்லப் போகிறாராம்.