மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி!
ADDED : 53 minutes ago
நடிகர் சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் அவரது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார்.
இதையடுத்து சூர்யா தயாரித்து, நடிக்கவுள்ள புதிய படத்திற்காக கதை கேட்டு வருகிறார். இந்த படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளார் சூர்யா. இந்த கூட்டணி 'பசங்க 2, எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைய வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.