உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர்

பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர்

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தனுசுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஹிந்தியில் சித்தாந்த் சதுர்வேதியுடன் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள தோ தீவானே செகர் மெய்ன் என்ற படம் வருகிற பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மிருணாள் தாக்கூர்.

தனது கடந்த கால காதல் பிரேக்கப் ஆனது குறித்த ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடனான காதலை அவர் பிரேக் செய்து விட்டார். இந்த விஷயம் அப்போது எனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றார் மிருணாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !