அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்!
ADDED : 7 hours ago
'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த பிறகு தனது அடுத்த படத்தில் விரைவில் அஜித்குமார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ தொடர்ந்து பல மாதங்களாக கார் ரேஸில் பிஸியாகி விட்டார். இதற்காகவே சமீபகாலமாக அவர் துபாயில் முகாமிட்டுள்ளார். அதோடு அவ்வப்போது அதிநவீன ரேஸ் கார்களையும் அவர் வாங்கி வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோ மோட்டிவ் பிரிவு தலைவர் வேலுசாமி என்பவர் அஜித்துக்கு உலகின் முதல் பார்முலா இ தீம் எஸ்யூவி என்ற காரை பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த காரின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அஜித்தின் கார் ரேஸ் ஆர்வத்தை பாராட்டி அவரை கவுரவிக்கும் விதமாக இந்த காரை அவருக்கு பரிசாக வழங்கி உள்ளார்கள்.