எம்.எஸ்.பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் 'விடியும் காத்திரு'
ADDED : 1 days ago
ப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் 'விடியும் காத்திரு'. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்தராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சி.சத்யா இசையமைக்க, ஜி.தாமோதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது “ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காகச் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்படும் அனுபவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்” என்றார்.