'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய்
தமிழக முதல்வர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் 'சிக்மா'. லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு சேலத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசும்போது, 'சிக்மா' படத்தின் புரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது மகிழ்ச்சி. ஏனென்றால், 'சிக்மா' படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், இங்கு நிறைய அழகான நினைவுகள் உண்டு. சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், பரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி.
நான் இயக்கிய முதல் படம் 'சிக்மா' அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் 'சிக்மா'. திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள் என்றார்.