உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன் மூலம் நிறைவேறிய சிரஞ்சீவியின் ஆசை

மகன் மூலம் நிறைவேறிய சிரஞ்சீவியின் ஆசை

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது. தில்ராஜ் தயாரிக்கிறார்.


இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசை மகன் மூலம் நிறைவேறி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: சில படங்கள் தொடக்கத்திலிருந்தே சிறப்பானதாக அமையும். இதுவும் அப்படியான ஒன்று. ஷங்கருடன் பணிபுரிவது எனக்கு ஒரு கனவாக இருந்து வந்தது. ராம் சரண் மூலம் அக்கனவு நனவாகி இருக்கிறது. அவர்கள் படம் இன்று தொடங்கியுள்ளது. கியாரா அத்வானி, தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !