உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கையில் கேடயத்த வாங்கின உடனே எல்லாம் பறந்து போச்சு' - அனிதா சம்பத்தின் உருக்கமான பதிவு

'கையில் கேடயத்த வாங்கின உடனே எல்லாம் பறந்து போச்சு' - அனிதா சம்பத்தின் உருக்கமான பதிவு

பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் பைனல் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதில் மிக சிறப்பாக நடனமாடி வந்த அனிதா சம்பத் - ஷாரிக் ஜோடி டைட்டில் பட்டம் வென்றுள்ளது. அவர்களுக்கு பரிசாக 3 லட்சம் வழங்கப்பட்டது. டைட்டில் ஜெயித்த மகிழ்ச்சியை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், 'உங்க எல்லோரட ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குழந்தைய கையில் வாங்கினதுமே பிரசவ வலி மறந்து போகுற மாதிரி, தூக்கம் இல்லாம, நேரத்துக்கு சாப்பிடாம, வாங்கிய காயங்கள், பட்ட வலி எல்லாம் கையில கேடயத்தை வாங்கின உடனேயே பறந்து போச்சு!' என கூறி ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !