உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பயந்து விட்டார் - தயாரிப்பாளர் கே.ராஜன் விளாசல்

விஜய் பயந்து விட்டார் - தயாரிப்பாளர் கே.ராஜன் விளாசல்

ருத்ரன் இயக்கத்தில் உருவான 2000 பட விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி., பற்றி விஜய் பேசியதால் அவருக்கு 12 மணி நேரம் மனஉளைச்சல் ஏற்பட்டது. இதன் பின் மத்திய அரசை பற்றி விஜய் விமர்சிப்பதே இல்லை. விஜய் பயந்து விட்டார். ஏன் என்றால் அவர் கோடீஸ்வரர். பணம் நிறைய இருப்பவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மையும் போய்விடுகிறது. யார் தவறு செய்தாலும் எதிர்க்கும் தன்மை ஏழைகளுக்கே உண்டு.

இவ்வாறு அவர் பேசியது, கோலிவுட்டில் விவாதப்பொருமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !