நரசிங்கபுரம் நரசிம்மர் கோவிலில் சுவாதி திருமஞ்சனம்
நரசிங்கபுரம் : நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாதி திருமஞ்சனம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது மரகத வல்லி சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்.இக்கோவில் மூலவர் நரசிம்மர், தாயாரை மடிமீது அமர்த்தி, அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்.
இங்கு மாதந்தோறும், பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ் சனம் நடைபெறுவது வழக்கம்.நேற்று, சுவாதி என்பதால், பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் நரசிம்ம பெருமாளை தரிசித்தனர்.
நினைத்த காரியம் கைகூட நெய் தீபம் ஏற்றி, கோவிலை, 32 முறை வலம் வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.திருமஞ்சனத்தை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு கோபூஜை நடந்தது.அதை தொடர்ந்து, யாக பூஜையுடன், நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.