காணிப்பாக்கம், விநாயகர் கோவில் உண்டியலில் வசூல் ரூ.1.74 கோடி
ADDED :2133 days ago
நகரி : காணிப்பாக்கம், விநாயகர் கோவில் உண்டியலில், 31 நாட்களில், பக்தர்கள், 1.74 கோடி ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின் றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் செலுத்தினர்.கடந்த, 31 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி தேமுலு முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர்.இதில், 1.74 கோடி ரூபாய் ரொக்கம், 118 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, 1,188 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தன.