திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலம்!
ADDED :4894 days ago
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் பல்லக்குகளுக்கு முன்னிலையில் (சப்தஸ்தானம்) அறம்வளர்த்தநாயகி சமேத ஐயாறப்பருக்கு பூ போடுதல் வைபோவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பூபோடும் வைபோவத்தின் போது கண்ணடிப்பல்லக்கில் அலங்காரத்தில் அறம்வளர்த்தநாயகி சமேத ஐயாறப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.