நாமக்கல் கோவில்களில் முருகருக்கு அலங்காரம்
ADDED :2052 days ago
நாமக்கல்: வைகாசி சஷ்டியை முன்னிட்டு, நாமக்கல் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று, நாமக்கல் பகுதி முருகன் கோவில்களில் பக்தர்கள் யாரையும் அனுமதிக்காமல், வைகாசி மாத சஷ்டி விழா கொண்டாப்பட்டது.
* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு அபி?ஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.