கோயிலில் உட்கார்வது ஏன்
ADDED :2019 days ago
வழிபாடு முடிந்ததும், கோயிலில் சிறிது நேரம் கிழக்கு அல்லது வடக்குநோக்கி உட்கார்ந்து எழுவர். இதற்கு காரணம் தெரியுமா?
கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் நம்முடன் இருந்து வழிகாட்டுகின்றனர். வழிபாடு முடிந்ததும் துாதர்களிடம் விடை பெற சிறிது நேரம் உட்கார வேண்டும். அப்போது, “தெய்வத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று இப்போது எமக்கு நல்வழி காட்டுங்கள்” என மனதிற்குள் வழிபட வேண்டும். அதன்பின் சிறிதுநேரம் தியானம் செய்து விட்டு புறப்படவேண்டும்.