ஆலயத்தில் வணங்க வேண்டிய திசை
ADDED :1985 days ago
ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்ட பின்பு, கொடிமரம், பீடம் ஆகியவற்றிற்கு அருகில் மட்டுமே சுவாமியை தரையில் விழுந்து வணங்கவேண்டும். இவ்வாறு, வணங்கும் போது கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி சுவாமி அமைந்த ஆலயமெனில் வடக்கு நோக்கியும், வடக்கு மற்றும் தெற்கு நோக்கி சுவாமி அமைந்த ஆலயமெனில் கிழக்கு நோக்கியும் மட்டுமே வணங்க வேண்டும். இவ்வாறு, விழுந்து வணங்குவதால் இறைவனின் அனுக்கிரகத்தை எளிதில் பெறலாம் என்பது நம்பிக்கை.